• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா? அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் அறிவுரை

December 29, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைத்தல், மேம்படுத்துதல், பூங்காக்கள் அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், குடிநீர் வழங்குதல், மாதிரி சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும்.

மாதிரி சாலையில் மின்சாரம், மிளிரும் விளம்பர பலகைகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்ற அனைத்து பயன்பாடுகளும் நிலத்தடியில் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை ஓரங்களில் நவீன மின்விளக்கு வசதிகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாக செய்து முடித்தல் வேண்டும்.

கோவை மாநகராட்சியில் வார்டு வாரியாக குடிநீர் வழங்கும் பணிகள் சீராக நடைபெற வேண்டும். மழைக்காலங்களில் மழைநீர் சேமிப்பதற்காக வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் துணை கமிஷனர் மதுராந்தகி, மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர்கள் ஞானவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க