• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த தனியார் கடைக்கு ரூ.1000 அபராதம் – மாநகராட்சி ஆணையர்

December 28, 2020 தண்டோரா குழு

கோவை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் இன்று 28.12.2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த தனியார் கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்து, கடை பூட்டப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாமல் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநருக்கு ரூ.200 மற்றும் நடத்துனருக்கு ரூ.200 அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் 10 நபர்களுக்கு தலா 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி நிர்வாக பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க