December 27, 2020
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் என கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை செல்வபுரம் அருகேயுள்ள அசோக் நகர் பகுதியில் கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்களை திசை திருப்ப மிக கடுமையாக முயற்சியை மேற்கொண்டுள்ளனர் எனவும், தமிழகத்திற்கு ஒரு மத்தியமைச்சர் கூட இல்லையென்றாலும், 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு தந்துள்ளது எனவும் அவர் கூறினார்.தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் எனவும், கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கூட்டணியில் அதிமுக தலைமைய என்பதை முடிவு செய்தது பாஜக தேசிய தலைமை தான் எனவும், அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டியது அதிமுக தான் எனவும் அவர் தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் அதிமுகவும், பாஜகவும் வலுவாக உள்ளது எனவும், பாஜக அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது இயற்கை எனவும் கூறிர அவர், அதிமுகவும், பாஜகவும் இணைந்து வேலை செய்யும் வகையில் உரிய இடங்களை கூட்டணி தலைமை ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.