• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒற்றை காட்டுயானை நடமாடும் சிசிடிவி காட்சி

December 26, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று அப்பகுதியில் சுற்றி வருவதாக கூறி வந்த நிலையில் யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் காட்டுயானை ஒன்று அவ்வழியே வந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். யானை அவ்வழியே செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதே சமயம் அந்நேரத்தில் பொதுமக்களும் வாகனங்களில் சென்று வருவதும் பதிவாகியுள்ளது.

அப்பகுதிகளில் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் இருப்பதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர். கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடுவதால் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் எனவே அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க