December 26, 2020
தண்டோரா குழு
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:-
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பாட்னாவிற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 28,29-ம்தேதிகள் மற்றும் 4,5-ம் தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 31-ம் தேதி மற்றும் 1,7,8-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது