• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய ஜனநாயக கட்சியில் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் இணைந்து வருகிறார்கள் – லீமாரோஸ்மார்ட்டின்

December 26, 2020 தண்டோரா குழு

இந்திய ஜனநாயக கட்சியில் இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் இணைந்து வருவதாக அக்கட்சியின் மாநில இணை பொது செயலாளர் லீமாரோஸ்மார்ட்டின் கோவையில் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணை பொது செயலாளராக கோவையை சேர்ந்த லீமா ரோஸ் மார்ட்டின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு பாராட்டும் தெரிவிக்கும் விதமாக இந்திய ஜனநாயக கட்சியின் மேற்கு மண்டலம் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக விமான நிலையம் அருகே கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட இந்திய ஜன நாயக கட்சியின் மாநில இணை பொது செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எங்களது கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் மாநில தலைவர் ரவி பச்சைமுத்து,செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதாகவும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தற்போது கட்சியில் ஆர்வமுடன் இணைந்து வருவதாக அவர் தெரிவித்தார். விழாவில் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரன் முத்துச்செல்வம் திருமுருகப்பன்,பூர்ண லிங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் பாரி கணபதி மற்றும் மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க