• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுவனிடம் செல்போனை பறித்துசெல்லும் மர்ம நபர்கள்

December 25, 2020 தண்டோரா குழு

கோவையில் சிறுவனிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்துசெல்லும் கண்காணிப்பு வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை கரும்புக்கடை டோல் கேட் அருகே கடந்த 23 ஆம் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்க்கு திரும்பிக்கொண்டு இருந்த சிறுவனிடம் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிறுவனிடம் செல்போனை பறித்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

தற்பொழுது அந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக குணியமுத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் செல்போனை பறிகொடுத்தவர் பெயர் இர்சாத்.என்பதும் கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குணியமுத்தூர் போலிசார் வழிப்பறி திருடர்களை தேடிவருகிறார்கள்.

மேலும் படிக்க