• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குறுந்தொழில் முனைவோர்களுக்கு உடனடியாக கடன் தந்து அரசு உதவ வேண்டும் தொழில் முனைவோர்கள் கோரிக்கை

December 24, 2020 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழில்கள் நிறுவனங்கள் முடங்கி இருந்தன. இதனால் தொழில்நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனை அடுத்து மத்திய அரசு பல்வேறு கடன் திட்டங்களை தொழில்துறையினருக்கு அறிவித்தது. கோவையில் ஜாப் ஆர்டர்கள் செய்து வரும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்களுக்கு இந்த கடன் திட்டத்தால் எந்த ஒரு பலனும் இல்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கடன் தந்து உதவ வேண்டும்.

குறுந்தொழில் முனைவோர்கள் பொதுத்துறை, உற்பத்தி நிறுவனங்களுக்கு செய்து கொடுக்கும் ஆர்டர்களுக்கு, அந்நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குள் அதற்கான தொகையை தர வேண்டும். கோவையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வாடகை கட்டிடங்களில் தொழில் நடத்தி வருகின்றனர். வாடகை கட்டணங்கள் உயர்வு போன்றவற்றால் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே மேட்டுப்பாளையம் சாலை, சக்தி சாலை, திருச்சி சாலை போன்ற எந்த ஒரு பகுதியிலிருந்தும் வருவதற்கு சீரமம் இல்லாமல் கோவையின் மையப்பகுதியில் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தொழிற்பேட்டை அமைத்து தரவேண்டும். அதில் அரசு கட்டிடங்களை அமைத்து தொழிற்துறையினருக்கு வாடகைக்கு விட வேண்டும் மிகவும் குறைவாக வாடகைக்கு.

இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

மேலும் படிக்க