• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ்

December 19, 2020 தண்டோரா குழு

கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கம் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது:

மூலப்பொருட்களின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது.இந்த விலை ஏற்றத்தால் பவுண்டரி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இதனிடையே வரும் 21ம் தேதி முதல் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை
தற்காலிகமாக விலக்கிக்கொள்வது என்று சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம்.இந்த வேலைநிறுத்தம் காரணமாக பவுண்டரித்தொழிலை சார்ந்துள்ள வெட்கிரைண்டர், பம்பு மற்றும் மோட்டார் போன்ற தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

பவுண்டரித்தொழிலின் வாடிக்கையாளர்கள் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை புரிந்து கொண்டுள்ளனர்.இது போன்ற காரணங்கனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தோம்.

இவ்வாறு சிவசண்முக குமார் கூறினார்.

மேலும் படிக்க