• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூலப்பொருட்கள் விலை உயர்வு – கொடிசியா அலுவலகத்தில் தொழில் அமைப்புகள் ஆலோசனை

December 18, 2020 தண்டோரா குழு

கோவை கொடிசியா நகர அலுவலகத்தில் தொழில் அமைப்புகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொடிசியா, சீமா, டாக்ட், டாப்மா, காட்மா, கோப்மா, காஸ்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய உருக்கு துறை அமைச்சரை நேரில் சந்தித்து மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் செயில், விசாக், ஜிண்டால் போன்ற நிறுவனங்களிடம் இருந்து மூலப்பொருட்களை நேரடியாக
பெறும் வகையில் இங்குள்ள தொழில் அமைப்புகள் பங்கு பெறும் ஒரு
கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். கோவையில் சிட்கோ மற்றும் என்எஸ்சி மூலம் முன்னுரிமை அடிப்படையில் மூலப்பொருட்களை வழங்குதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும். என்.எஸ்.ஜ.சி.யின் நிதியுதவி பெற வங்கி உத்திரவாதம் அளித்தல் வேண்டும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இது குறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது :

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகளை அரசிடம் வேண்டுகோளாய் வைப்பது என முடிவு
செய்யப்பட்டது. உற்பத்தி சார்ந்த தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய தேவையான ஸ்டீல் மற்றும்அது சார்ந்த மூலப்பொருட்கள் இந்தியாவில் எளிதில் கிடைக்கும் வகையில் இறக்குமதி வரியை குறைத்து இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.

மூலப்பொருட்களின் விற்பனை விலையை உறுதி செய்வதற்கு அதிகபட்ச விலையை
நிர்ணயம் செய்ய வேண்டும்.இந்த மூலப்பொருள் பற்றாக்குறை சிக்கலை சமாளிக்கும் வகையில் கோவையில் உள்ள செயில் விற்பனை வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க