• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டு குழு அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் மனு

December 16, 2020 தண்டோரா குழு

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டு குழு சார்பில் அதன் நிர்வாகிகள், மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது:

தொழிற்சாலைகள் பயன்படுத்தும் அனைத்து முக்கியமான மூலப்பொருட்களின் விலையும் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை 12.5 சதவீதம் முதல் 275 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் அதிக லாபம் ஈட்டுவதற்காக சில வணிகர்கள் இந்த மூலப்பொருட்களை இருப்பில் வைப்பதால் மூலப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை காரணமாக இப்பகுதியில் உள்ள பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளன. இதனால் வேலையின்மை ஏற்பட்டு பலருக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு சமூக சிக்கலும் ஏற்படும் நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கோவையின் தொழில் அமைப்புகளின் கூட்டு குழு சார்பில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.மேலும் தமிழக முதல்வருக்கும், இதர அமைச்சர் பெருமக்களுக்கும் இந்த கோரிக்கை மனுவை தபால் மூலம் சமர்ப்பித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க