• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தொழில் முனைவோர்கள் ஆர்ப்பாட்டம்

December 15, 2020 தண்டோரா குழு

மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வெட் கிரைண்டர்,மோட்டர் பம்புகளுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.தங்கம் விலை போல உயரும் மூலப்பொருட்கள் விலை உயர்வினால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும் மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், மூலப்பொருட்கள் இறக்குமதி மீதான வரிகளை குறைக்க வேண்டும் எனவும் கூறிய அவர்கள், விலை உயர்வை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். குறுந்தொழில் முனைவோருக்கு தனிக்கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும், கோவையில் மூடப்பட்டுள்ள மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கான செயில் கிடங்கை திறக்க வேண்டும் எனவும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க