• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கைகளை தட்டி கோஷங்களை எழுப்பி விவசாயிகள் நூதன போராட்டம்

December 15, 2020 தண்டோரா குழு

வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் வாபஸ் பெற வலியுறுத்தி கைகளை தட்டி கோஷங்களை எழுப்பி விவசாய சங்கத்தினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு சமீப காலத்தில் கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையிலும் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து,இரண்டாவது நாளாக இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைகளை தட்டியபடி மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 52 பேர் கைது செய்யபட்டனர்.

மேலும் படிக்க