December 13, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் அமல் படுத்த கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீடு வழங்க கோரியும் தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை காந்திபார்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் ஜோதிடர் அணித்தலைவர் சிவத்திரு பிரசன்ன சாமிகள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஆனது நடைபெற்றது.தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து இது மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி,கோவை மாவட்ட தலைவர் விவி மாணிக்கம்,தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.