• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

December 10, 2020 தண்டோரா குழு

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினரும், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் தபெதிக, திவிக, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.மத்திய அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க