• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுவேலை நிறுத்தத்திற்கு வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டிய கோவை மஜகவினர்!

December 7, 2020 தண்டோரா குழு

பொதுவேலை நிறுத்தத்திற்கு வியாபாரிகளிடம் கோவை மஜகவினர்ஆதரவு திரட்டினர்.

டெல்லியில் கடந்த 10 நாட்களாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் வரும் டிசம்பர் 8 அன்று விவசாயிகள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு அளித்து களப்பணியாற்றி வருகிறது.

அதை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட மஜக வின் வணிகர் சங்க பிரிவான MJVS மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) ஹாருன், அவர்கள் தலைமையில் பெரியகடைவீதி பகுதியில் வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினர்.
இதில் மாவட்ட பொருளாளர் நெளபல் பாபு, நகைகடை பிரிவு நிர்வாகிகள், மற்றும் நடைபாதை வியாபாரிகள் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க