• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கேட் மீது பைக் மோதி போலீஸ்காரர் உயிரிழப்பு

December 5, 2020 தண்டோரா குழு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி திரு வி க நகரைச் சேர்ந்தவர் அந்தோணி.இவரது மகன் அருள் ஆனந்த் வயது 30. இவர் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க பைக்கில் வந்திருந்தார். இன்று காலையில் ஊருக்கு திரும்பும்போது சிங்காநல்லூரில் உள்ள ரிலையன்ஸ் டவர் கேட் மீது பைக் மோதியது இதில் அருள் ஆனந்த் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து மணி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க