• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 75 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் ஒருவர் கைது

December 4, 2020 தண்டோரா குழு

கோவை ஆர் எஸ் புரத்தில் செந்தில் குமார் என்பவர் Pure India என்ற பெயரில் தண்ணீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்கள் மொத்த வியாபாரம் மற்றும் காட்டன் இந்தியா என்ற பெயரில் ஆண்களுக்கான துணிக்கடை நடத்தி வருகிறார்.

அதைப்போல் இவருடைய Pure India என்ற நிறுவனம் கோவை துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் இருக்கிறது. இங்கு வீரபெருமாள் ( 42 ) லட்சுமணன் என்பவர் பல வருடங்களாக மேலாலளர் பதவி வகித்து வந்ததாகவும் மேற்கண்ட மேலாலளர் பதவியினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி Aqua Pure என்ற பெயரில் தன்னுடைய விலாசத்திலேயே போலியான ரசீது புத்தகங்கள் தயார் செய்து செந்தில் குமார் என்பவர் நிறுவனத்தில் உள்ள பொருட்களையே எடுத்து அதற்கு போலியான ரசீது வழங்கி பல ஆண்டுகளாக பல தருணங்களில் வியாபாரம் செய்து ருபாய் 75 லட்சங்கள் மோசடி செய்ததாக நடவடிக்கை வேண்டி புகார் மனு அளித்திருந்தார் .

இந்நிலையில் புகார் தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது .கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில் கோவை மாநகர துணை ஆணையர் ( குற்றப்பிரிவு ) மேற்பார்வையில் மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்தநிலையில் மேற்படி எதிரியை கோவை சாய்பாபா காலனியில் தனது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க