• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 75 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் ஒருவர் கைது

December 4, 2020 தண்டோரா குழு

கோவை ஆர் எஸ் புரத்தில் செந்தில் குமார் என்பவர் Pure India என்ற பெயரில் தண்ணீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்கள் மொத்த வியாபாரம் மற்றும் காட்டன் இந்தியா என்ற பெயரில் ஆண்களுக்கான துணிக்கடை நடத்தி வருகிறார்.

அதைப்போல் இவருடைய Pure India என்ற நிறுவனம் கோவை துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் இருக்கிறது. இங்கு வீரபெருமாள் ( 42 ) லட்சுமணன் என்பவர் பல வருடங்களாக மேலாலளர் பதவி வகித்து வந்ததாகவும் மேற்கண்ட மேலாலளர் பதவியினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி Aqua Pure என்ற பெயரில் தன்னுடைய விலாசத்திலேயே போலியான ரசீது புத்தகங்கள் தயார் செய்து செந்தில் குமார் என்பவர் நிறுவனத்தில் உள்ள பொருட்களையே எடுத்து அதற்கு போலியான ரசீது வழங்கி பல ஆண்டுகளாக பல தருணங்களில் வியாபாரம் செய்து ருபாய் 75 லட்சங்கள் மோசடி செய்ததாக நடவடிக்கை வேண்டி புகார் மனு அளித்திருந்தார் .

இந்நிலையில் புகார் தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது .கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில் கோவை மாநகர துணை ஆணையர் ( குற்றப்பிரிவு ) மேற்பார்வையில் மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்தநிலையில் மேற்படி எதிரியை கோவை சாய்பாபா காலனியில் தனது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க