• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

November 30, 2020 தண்டோரா குழு

கோவை துடியலூரில் மளிகை கடையிலிருந்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் எடுத்து சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை துடியலூர் அடுத்த ஸ்ரீ முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(26). அதே பகுதியில் புவனேஷ்வரி என்பவருக்கு சொந்தமான கடையில் ஒப்பந்த அடிப்படையில், ஜெயஸ்ரீ மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.இதற்கிடையே புவனேஷ்வரி கடைக்கு அதிக வாடகை கேட்டதாக கூறப்படுகின்றது. இதனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயஸ்ரீயின் தாயார் லட்சுமி இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் புவனேஷ்வரி மீது வழக்கு போட்டுள்ளார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2 ந்தேதி மற்றும், 3 ந்தேதி அடியாட்கள் மூலம் மிரட்டப்பட்டதாகவும்,இதுதொடர்பாக, துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.தொடர்ந்து 5 ந்தேதி அதிகாலையில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மளிகை பொருட்கள், பிரிஜ், சுடிதார் துணிகள் என 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.எனவே நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தற்கொலை செய்வது தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ கூறினார்.

மேலும் படிக்க