• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 6ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு

November 30, 2020 தண்டோரா குழு

சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனுவில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் புல்லட் சேகர் தலைமையில் வழங்கப்பட்ட இதில், அயோத்தி ராமர் ஆலயம் பாபர் மசூதி பிரச்சினை நீண்ட காலமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு அயோத்தி நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது என்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியதுடன் அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஆலயம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாமல் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதி மீண்டும் பாபர் மசூதி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இது அமைதியான தமிழகத்தில் மத மோதல்கள் உருவாக்குவதோடு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் படி உள்ளதாகவும் எனவே டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது எனவும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தும் அமைப்புகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டுள்ள இந்த மனு அளிக்கும் போது கோவை மாவட்ட செயலாளர் சின்னியம்பாளையம் அணி தெற்கு மாவட்ட தலைவர் நெல்லை பாலா மாவட்ட செயலாளர் பரணி மாவட்ட அமைப்பாளர் ரஞ்சித் தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் ஆலய பாதுகாப்பு இங்கே நகர அமைப்பாளர் முனியப்பசாமி உட்பட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க