• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் போராட்டம்

November 30, 2020 தண்டோரா குழு

டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் உட்பட விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக அதன் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரியும் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கைகளில் தென்னங்கன்று, வாழை,மாமர கன்று உள்ளிட்ட விவசாய பயிர் செடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க