• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேல்யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது – எஸ்.ஆர்.சேகர்

November 19, 2020 தண்டோரா குழு

வேல்யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

கோவை சிவானந்தாகாலணி பகுதியில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

வருகின்ற 22 ம் தேதி வெற்றிவேல் யாத்திரை கோவையில் நடைபெறுகிறது. சிவானந்தா காலணி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் எனவும், இந்த பொதுக்கூட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கோரியுள்ள நிலையில், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் வ.உ.சி. மைதானத்தில் அரசியல் காரணங்களால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை எனவும், வேல்யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது எனவும் கூறிய அவர், காவல் துறை தடை விதித்தால் தடையை மீறி யாத்திரை நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க