• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேல்யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது – எஸ்.ஆர்.சேகர்

November 19, 2020 தண்டோரா குழு

வேல்யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

கோவை சிவானந்தாகாலணி பகுதியில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

வருகின்ற 22 ம் தேதி வெற்றிவேல் யாத்திரை கோவையில் நடைபெறுகிறது. சிவானந்தா காலணி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் எனவும், இந்த பொதுக்கூட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கோரியுள்ள நிலையில், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் வ.உ.சி. மைதானத்தில் அரசியல் காரணங்களால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை எனவும், வேல்யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது எனவும் கூறிய அவர், காவல் துறை தடை விதித்தால் தடையை மீறி யாத்திரை நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க