• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியம் கின்னஸ் சாதனை முயற்சி !

November 18, 2020 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியம் உலகிலேயே நீண்ட தலைப்பை உடைய , ‘ டேனியல் ராட்கிளிப் புத்தகத்தை அதிகம் பேர் பேசிய ஒலிநூல் என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

வயதை காரணம் காட்டி ஒதுங்கி அமர்ந்து விடுபவர்கள் மத்தியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.டாக்டர் சுப்ரமணியன்.63 வயதான டாக்டர் சுப்ரமணியன் ஒரு எழுத்தாளர் என்ற அவரது பயணத்தில் வரலாற்று பக்கங்களை அவரே எழுதியுள்ளார்.

ஒலிநுாலின் அதிகம் பேசியவர் ‘என்ற சாதனையை எட்ட அவர் முயற்சியை மேற்கொண்டார்.இதற்காக அவர் உலகிலேயே நீண்ட தலைப்பை உடைய ‘ டேனியல் ராட்கிளிப் ( 28.167 எழுத்துக்கள் மற்றும் 5532 வார்த்தைகளை முகப்பு பக்கத்தில் கொண்டது ) என்ற ,அவர் எழுதிய புத்தகத்தை தேர்வு செய்தார்.கின்னஸ் உலக சாதனை நாளில் நடந்த இந்த நிகழ்ச்சியை கின்னஸ் உலக சாதனைகள் ,’அதிகம் பேர் பேசிய ஒலிநூல் என்ற தலைப்பில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த ஒலி நுாலில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான 31 கலைஞர்கள் பங்கேற்று பேசியுள்ளனர்.இதற்கு முன்னர் 20 கலைஞர்கள் பேசிய நூலின் சாதனையை இது முறியடித்துள்ளது.இதற்கு முன் அவர் பல கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார்.2006 ல் . மிக நீண்ட கம்ப்யூட்டர் வகுப்பு நடத்தினார். இதில் முழுவதிலும் இருந்து 16 நாடுகளை சேர்ந்த 1934 மாணவர்கள் பங்கேற்றனர் . 2012 ல் , வேகமான நகர்படங்களை ( அனிமேட்டர் ) உருவாக்கியவர் என்ற சாதனையையும் பெற்றார்.தொடர்ச்சியாக 6 மணி தொடர்ச்சியாக பாடங்களை நடத்தி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க