• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மண்டல டாஸ்மாக் மாநில தொழிற்சங்கங்களின் சார்பில், நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த கூட்டம்

November 17, 2020 தண்டோரா குழு

கோவை,திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடங்கிய கோவை மண்டல டாஸ்மாக் மாநில தொழிற்சங்கங்களின் சார்பில், நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் தொமுச மாநில டாஸ்மாக் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக அரசுக்கும் நிர்வாகத்திற்கும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பாக வழங்கப்பட்ட பணி நிரந்தரம் , காலமுறை ஊதியம் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 30 சதவீதம் வழங்கிட வேண்டும், பணிநேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.டாஸ்மாக் ‘ பணியாளர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் இதர சலுவைகள் வழங்கிடவேண்டும்.”டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் விற்பனைத் தொகையினை சென்னையைப் போல் வங்கிகள் மூலம் நேரடியாக கடைகளுக்கு வந்து வசூல் செய்யும் முறையினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்திட வேண்டும்.கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக்’பணி யாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களின் கல்வித் தகுதிக் கேற்ப வாரிசு வேலை வழங்கவேண்டும் . உள்ளிட்ட பதினான்கு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி நவம்பர் 26 – ம்தேதியில் டாஸ்மாக் பணியாளர்கள் பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் அனைத்து சங்க கூட்டு குழு உறுப்பினர்களும் ஆதரவு தர வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இறுதியாக மாவட்ட டாஸ்மாக் LPF செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். இந்த கூட்டத்தில், தொமுச துணைப்பொதுச் செயலாளர் இரத்தினவேல், டாஸ்மாக் அனைத்து கூட்டு நடவடிக்கை குழு கோவை மண்டல தலைவர் ராக்கிமுத்து, ஏஐடியுசி – ஆறுமுகம், சிஐடியு மூர்த்தி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க