• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி

November 17, 2020 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியில் சாலையில் அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றதாக தெரிகிறது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிர் இழந்த முதியவர் யார் என்பது தெரியாததால் போத்தனூர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தில் உயிரிழந்த முதியவரை குறித்து அக்கம் பக்கம் இருப்போரிடம் விசாரணை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள்.மேலும் விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லாத காரணத்தினாலும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதன் பிறகுதான் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், இறந்த நபர் குறித்தும் விபரங்கள் தெரியவரும் என விபத்து பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் அப்பகுதி மக்களிடம் விபத்தில் இறந்தவர் குறித்து போத்தனூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க