• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி

November 17, 2020 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியில் சாலையில் அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றதாக தெரிகிறது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிர் இழந்த முதியவர் யார் என்பது தெரியாததால் போத்தனூர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தில் உயிரிழந்த முதியவரை குறித்து அக்கம் பக்கம் இருப்போரிடம் விசாரணை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள்.மேலும் விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லாத காரணத்தினாலும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதன் பிறகுதான் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், இறந்த நபர் குறித்தும் விபரங்கள் தெரியவரும் என விபத்து பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் அப்பகுதி மக்களிடம் விபத்தில் இறந்தவர் குறித்து போத்தனூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க