• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை

November 5, 2020 தண்டோரா குழு

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள அமிர்த ஜோதி காலனி பகுதியில் வசித்து வரும் தம்பதி சிவமுருகன் (50) மற்றும் வைர ராணி (40). இவர்களுக்கு சுபஸ்ரீ (22), ஹேமா (19) என இரண்டு மகள்கள் உள்ளனர். சுபஸ்ரீ அருகில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் இரண்டாவது மகள் ஹேமா கல்லூரியில் இளங்கலை படித்து வந்துள்ளார். சிவமுருகன் பால் பாக்கெட் போடும் வேலை பார்த்து வந்த நிலையில், அதில் போதிய வருமானம் இல்லாமல் கூடுதலாக கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சிவமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வரும் விஷம் அருந்தியதாகத் தெரிகிறது. இதில் ஹேமா தவிர மற்ற மூவரும் உயிரிழந்த நிலையில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக நான்கு பேரும் விஷம் விஷம் அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க