• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக – கேரளா எல்லையில் பண்டல் பண்டலாக கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது

November 4, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கேரள மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இன்று பிற்பகல் தமிழக எல்லையை அடுத்த வாளையாறு பகுதியில் கேரள மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தமிழகம் பதிவெண் கொண்ட ஆட்டோ வந்தபோது அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆட்டோவில் வந்த 3 பேரை பிடித்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து கோவை வழியாக ஆட்டோ மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த தேனியை சேர்ந்த ஜெயசீலன், காதர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கேசவன் ஆகிய 3 பேரை வாளையார் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சில்லறை மதிப்பு 63 லட்ச ரூபாய் இருக்கும் எனவும், தேனி , கம்பம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை, ஈரோட்டில் வைத்து பேக்கிங் செய்து கேரளாவிற்குள் கொண்டு வந்து இருப்பதும் வாளையார் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரிடமும் வாளையார் போலீசார் ( கேரளா) விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க