• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாடி மேலும் ஒருவர் தற்கொலை

November 3, 2020 தண்டோரா குழு

ஆன்லைனில் பணம் வெல்ல முடியாத விரக்தியில் கோவையில் சிஎன்சி ஆப்பரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் மச்சாம்பாளையம் ரவுண்ட் ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (32). இவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் சிஎன்சி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். திருமணமாகவில்லை. இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தனது உறவினர் ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதற்காக நிறைய இடங்களில் கடன் வாங்கி பணம் செலவு செய்துள்ளனர். அதனை அவரால் கட்ட முடியவில்லை.

மேலும் அவருக்கு சமீபத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் தொற்றிக்கொண்டது. வேலைக்கு செல்லாமல் முழுநேரமும் அதிலேயே கவனத்தை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அவரால் பணத்தை வெல்ல முடியவில்லை. இதனால் சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கோவை சீரநாயக்கன்பாளையத்தில் தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. தொடரும் தற்கொலைகளால் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.

மேலும் படிக்க