• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வர கடவுள் அருள் புரிவார்

November 2, 2020 தண்டோரா குழு

கடந்த ஆறு மாதமாக தொழில்கள், கல்வி என அனைத்தும் முடங்கிய நிலையில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதாகவும், விரைவிலேயே கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வர கடவுள் அருள் புரிவார் என கோவையில் சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கோவை, சிங்காநல்லூரில் துவங்கியுள்ள புதிய மகாதேவ் மையத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கடந்த ஆறு மாதமாக கொரோனா நோய் பரவலால் தொழில்கள் அனைத்தும் முடங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதாகவும்,மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க சிறப்பான நிர்வாகம் செய்ததாக கூறிய அவர்,குறிப்பாக சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் தங்களது பணிகளை திறம்பட செய்த்தாக தெரிவித்தார்.

மேலும் தற்போது மாற்றத்தை தர சிங்காநல்லூரில் புதிதாக துவங்கிய மகாதேவ் டைல்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல் மையம் சிறப்பாக செயல்பட தமது வாழ்த்துக்களை தெவிப்பதாக கூறினார்.

மேலும் படிக்க