• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம்

October 31, 2020 தண்டோரா குழு

கோவையில மத்திய பாஜக மேற்கொண்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

அண்மையில் விவசாயிகளுக்கு எதிராக 3 சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மறைந்த முன்னால் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் நினைவு தினம் விவசாயிக உரிமை மீட்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு,இந்த தினத்தில், மத்திய பாஜக மேற்கொண்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்,மயூரா ஜெயக்குமார்,தலைமையில் நடைபெற்ற இதில், மாநில,மாவட்ட நிர்வாகிகள், சார்பு, பகுதி,வட்டம்,அமைப்பு பல்வேறு நிலை காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க