• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் வாலிபர் தற்கொலை !

October 31, 2020 தண்டோரா குழு

கோவையில் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட நஷ்டத்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த மதன்குமார்(28).இவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணம்கட்டி விளையாடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இன்று மதங்குமார் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணையில் ஆன்லைன் விளையாட்டில் கட்டிய பணத்தை இழந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து,ஆர்.எஸ்.புரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பத்து நாட்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க