• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெங்காய விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம்

October 21, 2020 தண்டோரா குழு

தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலையைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

வெங்காய வரத்து குறைவு காரணமாக, வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரி, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை காட்டூர் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெங்காய மாலை அணிந்தபடி வெங்காய விலை உயர்வைக் கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் வெங்காயத்திற்கு ஒப்பாரி வைத்தும், மாலை அணிவித்து நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து வெங்காய விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாகவும் மாதர் சங்கத்தினர் கூறினர்.மேலும், வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரும்வரை ரேசன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய வேண்டும் எனவும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க