• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 72குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் அனுசரிப்பு

October 21, 2020 தண்டோரா குழு

கோவையில் 72 குண்டுகள் முழுங்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக கோவையில் உள்ள காவலர்கள் நினைவிடத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியையா ,காவல் கண்காணிப்பாளர் அருளரசு மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் என மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து 72குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க