October 21, 2020
தண்டோரா குழு
கோவையில் தீயணைப்பு துறையினர் கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன பேரணியாக சென்றனர்.
கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக பொதுமக்களிடையே கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது, தீயணைப்பு நிலைய வளாகத்தில் இருந்து இருசக்கர வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் வரிசையாக புறப்பட்டு கோவை மாநகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் தீயணைப்பு நிலையம் வந்தடைந்தது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலமாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முககவசங்கள் அணியவேண்டும், பொதுஇடங்கிளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் போன்ற பல்வேறு பதாதைகளை கைகளில் ஏந்தியபடி, கோவை மாநகரில் முக்கிய வீதிகளின் வழியாக வந்து பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.