பண்டிகை காலம் என்பதால் மக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நெருக்கமாக கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே சமூக இடைவெளியை பின்பற்றி முகவசங்களை மக்கள் கட்டாயம் அணிய வேண்டும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தன்னார்வலர்களும் அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை இந்தியன் பவுண்டேசன் சார்பாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக பணி புரியும் வகையில் இலவச கையுறைகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் இந்தியன் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் விஷ்ணு பிரபு இ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலாவிடம் வழங்கினார்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் நிர்மலா,
தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நெருக்கமாக கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே சமூக இடைவெளியை பின்பற்றி முகவசங்களை மக்கள் கட்டாயம் அணிந்து குழந்தைகள் சிறுவர்கள் போன்றவர்களை கடை வீதிக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை விரைவில் தடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் யங் இந்தியன் பவுண்டேசன் தாளாளர் கார்த்திகேயன் நிர்வாக உறுப்பினர்கள் வெங்கட்,பிலிப் பிரபு,மற்றும் மெட்ராத்தி ஜமீன் விஜயகுமார்,கட்டபொம்மன் ஜமீன்தார் சீனி கந்தசாமி,கலைமான் கள்ளிமடை காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு