October 19, 2020
தண்டோரா குழு
பொள்ளாச்சி அடுத்துள்ள வடக்கிபாளையம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோவிந்தராஜ் செட்டியார் தோட்டம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த பிரபு குமார்,நந்தினி தம்பதியினர் கடந்த 5 ஆண்டுகளாக தங்கி விவசாயக் கூலி வேலை செய்துவருகின்றனர்.இவர்களுக்குத் திருமணமாகி சிவக்குமார்(3)என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
நேற்று இருவரும் குடிபோதையில் குடும்பத்தகராறு காரணமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது திடீரென குடியிருக்கும் வீட்டிற்கு சுமார் 25 அடி தூரத்தில் உள்ள கிணற்றில் நந்தினி குடிபோதையில் ஓடிபோய் விழ அருகில் இருந்த கணவன் பிரபுகுமார் மனைவியை காப்பாற்ற ஓடிப்போய் கிணற்றில் விழுந்துள்ளார்.வீட்டில் இருந்த பிரபுகுமாரின் அத்தைமகன் மகேந்திரகுமார் பார்த்து சத்தம் போட அருகில் இருந்தவர்கள் கிணற்றில் போய் பார்க்க இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.
தோட்ட உரிமையாளருக்கு தோட்ட உரிமையாளர் முருகானந்தம்தகவல் கொடுத்ததின் பேரில் வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.