• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் லாரியில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

October 17, 2020 தண்டோரா குழு

கோவை பாலக்காடு சாலையில் லாரியில் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

கோவை பாலக்காடு சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருமலையம்பாளையம் பாலத்துறை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மதுக்கரை காவல்துறை விசாரணை செய்த போது இந்த லாரி கேரளா மாநிலம் மணப்புரம் பகுதியைச் சேர்ந்த முனீர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் இந்த லாரியில் பயணித்த ஊர்க்காவல் படையை சேர்ந்த செரீப் மற்றும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அனாஸ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க