• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் அதிமுகவின் 49 வது ஆண்டுவிழா கொண்டாட்டம்

October 17, 2020 தண்டோரா குழு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 49 வது ஆண்டுவிழா நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவையில் மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கட்சி தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக கட்சி தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று கோவை அவினாசி சாலையில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து. கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடியையேற்றி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்கள். இந்த விழாவில் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் படிக்க