October 16, 2020
தண்டோரா குழு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க கூடாது எனவும் உயர் கல்வி சிறப்பு நிறுவனம் என்ற முடிவை கைவிடுவதுடன் மத்திய அரசு நெறிமுறைகளை ஏற்க கூடாது எனவும்,மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் மாணவர் சங்க நிர்வாகிகளை மட்டும் ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். கோரிக்கை குறித்த மனுவினை ஆட்சியரிடம் வழங்கிய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.