• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு இன்று தடை

October 16, 2020 தண்டோரா குழு

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கும் படித்துறையில் தர்ப்பணம் வழிபாடுக்கும் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி அமாவாசையன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசையின் போது ஏராளமான பொதுமக்கள் வருவர்.இந்நிலையில், படித்துறை மற்றும் அம்மன் தோப்பு பகுதிகளில் தர்ப்பணம் வழிபாடுக்கு பேரூர் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பேரூர் நொய்யல் படித்துறையில் ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை தினங்களில் தர்ப்பணம், வழிபாடுக்கு தடை விதிக்கப்பட்டு, தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், புரட்டாசி அமாவாசை தினமான இன்று படித்துறை மற்றும் அம்மன் தோப்பு பகுதிகளில் தர்ப்பணம் வழிபாடுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. அத்துடன், கோவிலில் சுவாமி தரிசனத்துக்கும் தடை விதிப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க