• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இரத்தினம் கல்வி குழுமங்கள் சார்பாக கல்லூரி சார்பில் ஸ்டார்ட் அப் பயிற்சி மையம் துவக்கம்

October 15, 2020 தண்டோரா குழு

கோவை இரத்தினம் கல்வி குழுமங்கள் சார்பாக கல்லூரி மாணவர்களின் தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் விதமாக புதிய வகையிலான ஸ்டார்ட் அப் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தொழில் சார்ந்த திறன்களை வளர்க்கும் விதமான இரத்தினம் ஸ்டார்ட் அப் ஸ்கூல் துவக்க விழா இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இணைய வழியாக நடைபெற்ற இதில் இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தற்போதைய கல்லூரி மாணவ, மாணவிகளின் வழக்கமான பாடங்கள் தவிர்த்து அவர்களின் தனி திறன்களை வெளிகொணர்வது, அதனை தொழில் சார்ந்த அறிவுகளாக மாற்றி அந்த மாணவர்களையே தொழில் முனைவோர்களாகவும், அதில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான திறன்களை இந்த பயிற்சி வகுப்பில் அளிக்க உள்ளதாகவும் மேலும் மாணவர்களின் தனித்திறமைகளுக்கு ஏற்றவாறு அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு பகுப்பாய்வுத் திறன். நினைவாற்றல், தொழில் சார்ந்த நுண்ணறிவு,புதிய கண்டுபிடிப்புகளுக்கு தீர்வு காணுதல், கவனக்குவிப்பு, போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக இதன் துவக்க விழாவில்,ஜோஹோ கற்றல் பள்ளிகளின் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி ரத்தினம் ஸ்டார்ட்அப் பள்ளியை துவக்கி வைத்து பேசினார்., இணைய வழியாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மனநிலை எனும் தலைப்பில் பேசிய அவர், மாணவர்கள் தன்னிடமிருந்து ஒரு வாய்ப்பைத் தேட வேண்டும், ஆனால் வெளி உலகில் அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க