• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து வழங்கிய தன்னார்வலர்

October 13, 2020 தண்டோரா குழு

தனது பிறந்த நாளில் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தன்னுடையே இல்லத்தில் வைத்து அசைவ விருந்து வழங்கி அசத்திய தன்னார்வலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவையில் அ.தி.மு.க.உறுப்பினரும், அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் அறங்காவலர் சோனாலி பிரதீப் கொரோனா கால நேரங்களில் மலைவாழ் மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

இந்நிலையில் இவரின் கணவரும், டிரஸ்டின் துணை அறங்காவலரும் ஆன பிரதீப் ஜோஸ் தனது பிறந்த தினத்தை P.N.T காலனியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார். விழாவை முன்னிட்டு தனது பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தமது இல்லத்திற்கே வழவழைத்து, பிரியாணி, சிக்கன் கிரேவி,மற்றும் வடை பாயாசத்துடன் அறு சுவை சைவ உணவு வழங்கி அசத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தனது பிறந்த நாளில் சமுதாய சேவை பணியில் உள்ளவர்களை ஏதாவது ஒரு வகையில் அங்கீகரிக்கும் வகையில் இந்த சேவையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தம்முடைய பிறந்த நாளில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து வழங்கிய இவருடைய இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க