• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்டிசி ஊழியர்கள் வீடு திரும்பா போராட்டம்

October 13, 2020 தண்டோரா குழு

மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழக வெற்றிக்குச் சொந்தமான பஞ்சாலைகள் தமிழகத்தில் 12 இடங்களில் இயங்கி வருகிறது. இதில் சுமார் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர்.கொரோனா ஆமாங்க மார்ச் மாதம் மூடப்பட்ட ஆலைகளை திறந்திட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கோவை காட்டூர் பகுதியில் உள்ள என்டிசி ஆலையின் முன்பு வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு கொடியினை ஏந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அலுவலகத்தினுள் சென்று அவர்களது கோரிக்கை போராட்டத்தை நடத்த திட்டமிட்ட பொழுது ஆலையின் முன் கதவு மூடப்பட்டிருந்ததால் ஆலையின் முன்பு மத்திய அரசை கண்டித்தும் ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் ஆலைகளை திறக்கும் வரை தொழிலாளர்களுக்கு முழு சம்பளத்தை வழங்கிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனை தொடர்ந்து ஆலையின் நிர்வாகத்தினர் வருகின்ற 16 ம் தேதி மத்திய தொழிலாளர் இணை ஆணையருடன் இணைந்து கூகுள் ஜூம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை கூறுவதாக தெரிவித்ததால் தற்காலிகமாக இந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க