• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஷன் கார்டுக்கு புதுப்பானை, அடுப்பு வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

October 12, 2020 தண்டோரா குழு

வருகிற பொங்கல் பண்டிகையின்போது புதுப்பானை புது அடுப்பும் இலவசமாக அரசு வழங்ககோரி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பாக கோவை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கார்டுகளுக்கு இலவச பச்சரிசி சர்க்கரை பருப்பு எண்ணெய் முந்திரி திராட்சை போன்ற உணவுப் பொருட்கள் ஆயிரம் ரூபாயுடன் உதவி வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் புது அரிசியை புது பானையில் வைத்து பொங்கிட புதுப்பானை ஒன்றும் புதிய அடுப்பு ஒன்றும் இரண்டு பொருட்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு நமது அரசு இலவசமாகத் தந்து உதவிட வேண்டுகிறோம்.

தமிழகத்தில் கொள்ளார் சமூக மக்கள் 40 இலட்சம் பேர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் மண்பாண்ட தொழில் செய்து வருகின்ற தொழிலாளர்கள் தற்போது 4 லட்சம் பேர்கள் மட்டுமே சட்டி பானைகள் அகல் விளக்குகள் உண்டில் அடுப்பு தெய்வ திருவுருவங்கள் போன்ற பொம்மைகள் செய்து ஜீவித்து வருகிறார்கள். இந்த நிலையில் உள்ள தொழிலாளர்களின் வாழ்வு மலர பொங்கல் பண்டிகையின்போது கார்டுதாரர்களுக்கு ஒரு புது புது அடுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க