October 11, 2020
தண்டோரா குழு
உத்தரபிரதேசம் மனிஷா என்ற தலித் பெண்மணி கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு வெறியர்களை தூக்கிலிடக் கோரி அவர்களை காப்பாற்ற முயலும் யோகி அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் இ.அகமது கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக், கண்டன உரையாற்றினார்.பெண்கள் குழந்தைகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.