• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியின் பிறந்த நாள் நலத்திட்டங்களின் தொடர் நிகழ்ச்சி

October 10, 2020 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நலத்திட்டங்களின் தொடர் நிகழ்ச்சியாக கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் வசிக்கும் கால் டாக்சி,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி மூட்டை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

பாரத பிரதமர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ஜி அறிவுறுத்தலின் படி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் மாநில பொது செயலாளர் ஜி கே செல்வகுமார் ஆகியோரின் அறிவுரைப்படி பிறந்ததின நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கோவை 58 வது வார்டு ஒண்டிப்புதூர் மண்டல் நீலிகோணம்பாளையம் பகுதியில் எழுபது ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு அரசி மூட்டைகளை மாநகர் மாவட்ட துணை தலைவர் பிரீமியர் பிரபாகரன் வழங்கினார். தொடர்ந்து அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு மைலோ ஆரோக்கிய சத்து மாவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத் முத்துக்குமார் ரவிச்சந்திரன் வேணுகோபால் செல்லையா, ஆட்டோ பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க