• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருகிய நிலையில் பெண் சடலம் – போலீசார் விசாரணை

October 8, 2020 தண்டோரா குழு

கோவையில் கருகிய நிலையில் பெண் சடலம் கண்டுக்கப்பட்டுள்ளது.தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (50). தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கார்த்திகா(43).இத்தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திகா கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் தனது கணவரை தன்னுடன் இருக்க அனுமதிக்காமல் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி மருத்துவர் விஜயகுமார் மனைவியை பார்த்து விட்டு சென்றவர் மருத்துவமனையிலேயே தங்கி உள்ளார்.நேற்று கார்த்திகாவின் சகோதிரி வாசுமதி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது கார்த்திகவின் அலைபேசி ஸ்விட்ச் ஆப் ஆகி இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த வாசுமதி மாலை 7.30 மணியளவில் கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உட்புறமாக தாளிடபட்டு இருப்பதை கண்ட அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அறையில் எரிந்த நிலையில் கார்திகாவின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்த காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தீ விபத்து ஏற்பட்டு மரணமடைந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க