• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்

October 6, 2020 தண்டோரா குழு

தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி,தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர்.அனைத்து மாவட்ட தலைநகரங்கள்,புறநகர், பேரூராட்சி மற்றும் கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற இருந்த நிலையில்,கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு ஊரடங்கு தொடர்வதால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சங்கர் குரு,தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“பள்ளர், குடும்பர்,பண்ணாடி, காலாடி, உள்ளிட்ட பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும்,அதன் படி தேவேந்திர குல வேளாளர்களின் பல்வேறு கோரிக்கைளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கவனம் செலுத்தி நிறைவேற்றி தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.இதில் தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் பிரபு குமார் பட்டக்காரர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க