• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி உதவி ஆணையர் மகேஷ் அதிரடி ஆய்வு

October 4, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் அருகே இயங்கி வரும் மார்க்கெட்டில் இன்று அசைவ பிரியர்கள் ஏராளமானோர் மீன் வாங்க குவிந்தனர். அப்பொழுது கோவை மாநகராட்சியின் உதவி ஆணையர் மகேஷ் ஆய்வினை மேற்கொண்டார். அப்பொழுது அசைவ பிரியர்கள் மீன் மார்க்கெட்டில் உட்புறங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் முககவசம் அணியாமலும் கையுறைகளை அணியாமலும் இருந்தனர்.இதனை கண்ட அவர் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

குறிப்பாக கொரோனா தொற்று மக்களிடம் இருந்து விடுபடாத சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றார். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்று தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் விதியை கடைப்பிடிக்காமல் இருப்பது மாநகராட்சியில் பெரும் தலைவலியாக இருக்கின்றன. நாள்தோறும் கோவையில் 500க்கும் மேற்பட்டோர் கொரணாவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வரும் வேளையில் பொதுமக்கள் விதிகளை கடைபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றன.இதனை அடிப்படையாக வைத்து அறிவுரை வழங்கிய உதவி ஆணையர் மகேஷ் பொது இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

மேலும் படிக்க