October 3, 2020
தண்டோரா குழு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் இன பெண் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பலரும் கூறி வந்த நிலையில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உத்தரபிரதேச காவல்துறையினரால் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில்,காவல் துறையினர் கூறியதை கண்டித்தும்,சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், என்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, கரும்புக்கடை பகுதியில் SDPI கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சாஜிதா மாவட்ட துணை தலைவர் கதீஜா பொருளாளர் மைமுனா மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்தேசிய செயலாளர் சர்மிளா பானு,மாவட்டதலைவர் நஸீமா SDPI கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் A.A.அப்துல் காதர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.